யாழ்.வட்டுக்கோட்டை - அராலியில் மூச்சு திணறலால் உயிரிழந்த இளம் குடும்பஸ்த்தருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை - அராலியில் மூச்சு திணறலால் உயிரிழந்த இளம் குடும்பஸ்த்தருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.வட்டுக்கோட்டை அராலி மேற்கை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மூச்சு திணறலால் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

32 வயதான 3 பிள்ளைகளின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு குணடைந்த நிலையில் திடீர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாக 

வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 

தொற்றில்லை என கூறப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பபட்டிருந்த நிலையில் நேற்று திடீர் சுகயீனமடைந்த குறித்த நபர் மூச்சு திணறலால் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு