யாழ்.வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு! சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு! சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவராம்..

யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமாகியிருந்த நிலையில் நேற்று திடீர் சுகயீனமடைந்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார். அதன் பின்னர் நேற்று திடீர் சுகயீனமடைந்த நிலையில் 

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் நோயாளி உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தியாகராசா ஜெயரஞ்சன் (வயது 32) 

என்ற முன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு