வடக்கில் வேலையற்ற இளைஞர்களை பயன்படுத்தி “பிரஜா காவலத்துறை” உருவாக்க ஆளுநர் திட்டம்!

ஆசிரியர் - Editor I
வடக்கில் வேலையற்ற இளைஞர்களை பயன்படுத்தி “பிரஜா காவலத்துறை” உருவாக்க ஆளுநர் திட்டம்!

வடமாகாணத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை பயன்படுத்தி “பிரஜா காவலத்துறை” உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையின் கீழ் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்பில் 

இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல். 

சமூக காவல் குழுக்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு 

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதே வேலைத்திட்டமாகும். இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், 

காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு