யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை! 10 ஆயிரத்து 300 குடும்பங்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை! 10 ஆயிரத்து 300 குடும்பங்கள் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 111 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும்  தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 44 குடும்பங்களை சேர்ந்த 153 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு