யாழ்.நெடுந்தீவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு..! 14 குடும்பங்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு..! 14 குடும்பங்கள் பாதிப்பு..

யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 119.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், 

நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கடும் மழையின் தாக்கத்தினால்  14 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர். 

உறவினர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு