55 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மைதானம் இன்று திறக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
55 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மைதானம் இன்று திறக்கப்பட்டது!

இந்துக் கல்லூரியில் மைதானங்கள் நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் சேவை புனரமைக்கப்பட்டு இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ்.இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் சம்பிரதாயபூர்வமாக இன்று கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ்,

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இலத்திரனியல் ஸ்கோர்போட் , கழக மனை , பயிற்சிகளுக்கான இடம் போன்றன இந்த திடலில் உள்ளமை விசேட அம்சமாகும்

இந்த விளையாட்டுத்திடலானது வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு