யாழ்.நகரை அண்மித்த வசந்தபுரம் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு! வெள்ள நீரை அகற்ற விசேட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்மித்த வசந்தபுரம் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு! வெள்ள நீரை அகற்ற விசேட நடவடிக்கை..

யாழ்.வசந்தபுரம் கிராமத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படடு வருகின்றது.

அந்த வகையில் இன்று மதியம் வசந்தபுரம் கிராமத்தில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றது.குறித்த பகுதிக்கு 

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு