மணல் கள்ளர்களை கைது செய்யுங்கள்..! பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்பு..

ஆசிரியர் - Editor I
மணல் கள்ளர்களை கைது செய்யுங்கள்..! பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்பு..

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைளுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாரை பணித்துள்ளார். 

நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் மணலை பெறுவதற்காக 

எவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அவ்வாறே மணலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுபவர்களை உடனடியாக கைதுசெய்து 

சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு