யாழ்.இளவாலையில் 26 குடும்பங்கள் வெள்ளத்தினால் இடப்பெயர்வு!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் 26 குடும்பங்கள் வெள்ளத்தினால் இடப்பெயர்வு!

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இளவாலை ஜே/222 கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக சுமார் 26 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடைத்தங்கல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த பகுதிக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.அத்தோடு இராணுவத்தினரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் 

மற்றும் மக்களை சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை குறியிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு