யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை! 7584 குடும்பங்கள் பாதிப்பு, 75 வீடுகள் சேதம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை! 7584 குடும்பங்கள் பாதிப்பு, 75 வீடுகள் சேதம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் சுமார் 7584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்துள்ளது. 

நேற்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், நேற்றுமுன்தினம் இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் 75 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், 

சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த பதிவுகள் பெறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு