யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை அறிவிப்பு..! கனமழை நீடிக்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை அறிவிப்பு..! கனமழை நீடிக்கிறது..

யாழ்.மாவட்டத்தில் கனமழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் 

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலையை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பாடசாலைக்கே திறப்பதற்கான மாற்று தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு