யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் 149 குடும்பங்களை சேர்ந்து 460 பேர் பாதிக்கப்பட்டனர்!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் நல்லுார் மற்றும் சங்கான பகுதிகளில் கனமழையினால் 460 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

149 குடும்பங்களை சேர்ந்த 460 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

சங்கானை மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் அனர்த்த பாதிப்பு விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு