வன்னிஹோப் நிறுவனத்தின் நிதியுதவியில் யாழ்.சன்மார்க்க வித்தியாலயத்தில் கணனி கூடம்! இந்திய துணை துாதுவர் திறந்துவைத்தார்..

ஆசிரியர் - Editor I
வன்னிஹோப் நிறுவனத்தின் நிதியுதவியில் யாழ்.சன்மார்க்க வித்தியாலயத்தில் கணனி கூடம்! இந்திய துணை துாதுவர் திறந்துவைத்தார்..

வன்னிஹோப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் யாழ்.சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணனி  கூடத்தினை இன்றைய தினம் யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஸ் நடராஜ்  திறந்து வைத்தார். 

யாழ்.மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும் தொழிநுட்ப அறிவை மேம்படுத்த 

வடமாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டலில் வன்னிஹோப்,அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 08-11-2021 இன்று திங்கட்கிழமை இந்திய துணைதூதுவரினால் திறந்துவைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், வன்னி ஹோப் அவுஸ்திரேலியா மற்றும் யு.எஸ்.டி.எப் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் 

 கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் , ஸ்டெப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு