யாழ்.வடமராட்சி மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்..!

யாழ்.வடமராட்சி கடலில் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் கரை திரும்பாமலிருந்த படகுகளும் மீனவர்களும் இன்று மாலை 5 மணிக்குள் கரை திரும்பியிருக்கின்றனர். 

காலநிலை சீரின்மை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடற்றொழிலுக்கு சென்றிருந்த 15ற்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் 45 ற்றும் மேற்பட்ட மீனவர்கள் 

வழக்கமாக கரைக்கு திரும்பும் நேரமான காலை 8 மணி தாண்டியும் கரை திரும்பாமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் பிற்பகல் 1 மணியிலிருந்து 5 மணிக்குள் சகல படகுகளும் கரை திரும்பியிருக்கின்றன. அதில் இரு படகுகளில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் மற்றய மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பியுள்ளனர். 

அதேபோல் 3 படகுகளில் சென்ற மீனவர்களின் வலைகள் கடல் கொந்தளிப்பில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு