யாழ்.மாவட்ட நெற் செய்கையாளர்களுக்கு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட நெற் செய்கையாளர்களுக்கு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கான முதற்கட்ட நனோ நைட்ரஜன் திரவப் பசளை இன்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நனோ நைட்ரஜன் திரவப் பசளையானது யாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு மற்றும் நல்லூர் தவிர்ந்த 13 கமநல சேவைகள் நிலையங்களில் தெரிவு செய்யப்பட்ட நெற் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும். 

ஒரு ஹெக்டேயருக்கு 1.25லீற்றர் என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ள நிலையில் தொடர்ச்சியாக 2ம் கட்ட பசளை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு