யாழ்.திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்தியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ சாரதி! ஆசிரியர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்தியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ சாரதி! ஆசிரியர் படுகாயம்..

குறுக்கு வீதியில் இருந்து பலாலி வீதிக்கு ஏறுவதற்காக வந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியிருக்கின்றது. 

திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்திப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 

குறித்த முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் மோதியதுடன் ஆசிரியர் ஒருவரையும் மோதி தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

காயமடைந்த ஆசிரியர் நோயாளர் காவுவண்டி மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு