யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியை கடந்த முதியவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! முதியவர் பலி, இளைஞன் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியை கடந்த முதியவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! முதியவர் பலி, இளைஞன் காயம்..

வீதியை கடக்க முயன்ற முதியவரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தை சேர்ந்த க.லோகநாதன் (வயது65) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் 

வர்த்தக நிலையத்திற்கு சென்றுவிட்டு வீதியை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த முதியவர் 

மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞன் ஆகிய இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு