யாழ்.புங்குடுதீவில் 14 ஏக்கர் மக்களின் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க முயற்சி! நாளை அளவீடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் 14 ஏக்கர் மக்களின் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க முயற்சி! நாளை அளவீடு..

யாழ் புங்குடுதீவு - வல்லன் பகுதியில் கடற்படையின் தேவைக்காக சுமார் 14 ஏக்கர் 4 றுாட் அளவுள்ள காணியை சுவீகரிப்பிற்காக நாளை அளவீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த காலங்களில் இரு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்றபோதிலும் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்முயற்சி இடைநிறுத்தப்பட்டது. 

மீளவும் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள மேற்படி காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அவ்விடத்தில் ஒன்றுகூடுமாறும் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் 

வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு