யாழ்.சுழிபுரம் திக்கரையில் நடந்த துயரம்! 18 வயதான மாணவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் திக்கரையில் நடந்த துயரம்! 18 வயதான மாணவன் உயிரிழப்பு..

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் திக்கரை பகுதியில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றிருந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணறு நீந்த சென்றிருந்தார். 

இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை 

அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர். 

மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவரது உயிர் பிரிந்தது.

குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு