நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை..!

யாழ்.நல்லுார் இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதன்படி நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட 

யாழ்.மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது.அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு