யாழ்.நாவாந்துறையில் சிறுவர்களுக்கிடையில் அடிதடி உருவாக காரணம் இதுதான், 11 சிறுவர்களும் பிணையில் விடுதலை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் சிறுவர்களுக்கிடையில் அடிதடி உருவாக காரணம் இதுதான், 11 சிறுவர்களும் பிணையில் விடுதலை..!

கிரிக்கெட் விளையாட்டில் ஓட்ட எண்ணிக்கையை மாற்றி சொன்னதாலேயே யாழ்.நாவாந்துறையில் சிறுவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதான 11 சிறுவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

யாழ்.நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் சிறுவர்களிடையே ஓட்ட எண்ணிக்கையை மாற்றிச் சொன்னதால் எழுந்த முரண்பாடு பின்னர் மோதலாக மாறியிருக்கின்றது. 

இதனால் அங்கிருந்த கிரிகெட் விக்கெட்டுகளினால் தாக்குதால் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றிரக்கின்றது. 

சம்பவத்தில் சிறுவர் ஒருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இதனடிப்படையில் கடந்த 3ம் திகதி, 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விக்கெட் கட்டைகளால் மோதலில் ஈடபட்டனர் என பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அவர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க உத்தரவிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அவர்களையும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 

பிணை முறியில் கையொப்பமிட்டதன் அடிப்படையில் விடுவிக்க மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு