ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவாதத்தை தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது..!

ஆசிரியர் - Editor I
ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவாதத்தை தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது..!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த சுகாதார தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

நிரந்தர நியமனம் கேட்டுப் போராடி வந்த சுகாதார தொண்டர்களிடம் வடமாகாண ஆளுநர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இன்றைய தினம் மாலை போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தகரப் பந்தல் அமைத்து இரவு பகலாக போராடி வந்தனர். 

இந்நிலையில் தமது நிலைமையை அறிந்து எம்முடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளை தீர்ப்பதாக ஆளுநர் உறுதி அளித்ததன் காரணமாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு