யாழ்.தலைமை தபாலக நிர்வாகம் சிதைந்துள்ளது. பொறுப்புவாய்ந்தோர் மௌனம்..! தபாலக ஊழியர்கள் போராட்டம், ஆளுநருக்கு மகஜரும் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தலைமை தபாலக நிர்வாகம் சிதைந்துள்ளது. பொறுப்புவாய்ந்தோர் மௌனம்..! தபாலக ஊழியர்கள் போராட்டம், ஆளுநருக்கு மகஜரும் கையளிப்பு..

யாழ்.தலைமை அஞ்சல் அலுவலக நிர்வாகம் சிதைவடைந்துள்ளதாக கூறி அஞ்சல் அலுவலக கோலவுடை ஊழியர்கள் இன்று புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, அஞ்சல் அலுவலக வளாகத்தில் பாணியாற்றும் சில நிர்வாக அதிகாரிகளால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில் 

உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. தமது கடமைகள் தொடர்பில் உத்தரவுகளை வழங்குவதற்கு மேலதிகாரிகள் இருந்தும்

அஞ்சல் ஊழியர்களாக இருந்து பதவி உயர்வு பெற்ற சிலர் மேல் அதிகாரிகள் தெரிவித்ததாக சில நிர்வாக விடயங்களை கையாளுகின்றனர். இதன் காரணமாக தாம் தொடர்ச்சியாக நிர்வாக நீதியாக நசுக்கப்பட்டு வருவதால் 

மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் பேரணியாக ஆளுநர் அலுவலகம் வரை சென்று 

மஜகர் கையளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு