கர்ப்பவதிகளாக உள்ள அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதிகளாக உள்ள அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..!

கர்ப்பவதிகளாக உள்ள அரச ஊழியர்களை மீளவும் கடமைக்கு அழைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் சில வரையறைகளுடனேயே இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார். 

கர்ப்பிணித் தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அந்தந்த நிறுவனங்கள், தமது தேவைக்கேற்ப தீர்மானிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு