யாழ்.மாநகரில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை! முக கவசம் அணியாத 25 பேர் கைது, நடவடிக்கை தொடருமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை! முக கவசம் அணியாத 25 பேர் கைது, நடவடிக்கை தொடருமாம்..

யாழ்.நகரில் முக கவசம் அணியாமல் நடமாடிய 25 பேர் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் பொது இடங்களில் சிலர் முக கவசம் அணியாமல் நடமாடுவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகிறது. 

இந்நிலையில் தற்போது பண்டிகை காலலும் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்.நகரில் நேற்றய தினம் 

சுகாதார நடைமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் நடமாடிய 25 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் 

அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. 

இந்நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு