இரு பெண்களுக்கிடையில் மோதல்..! விலக்குத் தீர்க்கபோனவர் குத்திக் கொலை, பெண் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
இரு பெண்களுக்கிடையில் மோதல்..! விலக்குத் தீர்க்கபோனவர் குத்திக் கொலை, பெண் ஒருவர் கைது..

இரு பெண்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் நடுவே புகுந்து விலக்கு பிடிக்க முயன்ற 37 வயதான குடும்பஸ்த்தர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் குருநாகல் மாவட்டம், மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

உயிரிழந்த நபர் வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி நிறைவடைந்து வீடு செல்லும் போது, இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த மோதலைத் தடுப்பதற்காக

முயற்சித்துள்ளார். இதன்போது மோதலில் ஈடுபட்டிருந்த பெண்களில் ஒருவருடைய கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் மற்றய பெண்ணால் வைத்தியசாலைக்கு

எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை உயிரிழந்த நபரின் மனைவி, கடந்த 7 நாட்களுக்கு முன்னரே 

குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில், கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு