வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்! 2 வயது சிறுமி உட்பட 27 பேருக்கு தொற்று உறுதி!
2 வயது சிறுமி உட்பட வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 319 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
இதன்படி யாழ்.மாவட்டத்தில் 11 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 12 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.