யாழ்.சுழிபுரத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் வீடு முற்றுகை! கோடரி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு, 25 வயதான நபர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் வீடு முற்றுகை! கோடரி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு, 25 வயதான நபர் கைது..

யாழ்.பொன்னாலை - சுழிபுரம் ஜே/170 கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை - சுழிபுரம் பகுதியில் வாள் ஒன்றை வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.

மேலும் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வாள்ஒன்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டது. இதனை அடுத்து வாளை வைத்திருந்த குற்றாச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட் நபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர். அண்மையில் பொன்னாலையில் பிறிதொரு பகுதியிலும் 

இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு