இராணுவத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு - ஐனாதிபதிக்கு வடமாகாண அழகக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு - ஐனாதிபதிக்கு வடமாகாண அழகக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டு..

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற சலூண்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.

தொடர்ந்து  தெரிவிக்கையில்,

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் சலூண்களக நடாத்துவதனால் தமது  வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமாகாணத்தில் புதிய அழகக சங்கங்களை அமைப்பதற்கு உள்ளூராட்சி திணைக்களம் அனுமதி தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் புதிதாக பொறுப்பேற்றுள்ள வடமாகாண ஆளுநருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு