வடமாகாணத்தில் 680 பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும்! ஆளுநர் விடுத்த அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 680 பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும்! ஆளுநர் விடுத்த அறிவிப்பு..

எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் வடக்கில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 680 பாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவித்திருக்கின்றார். 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர்களுடனான மெய்நிகர் இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். எனினும் வடக்கில் திறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பான விபரம் இதுவரை வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு