யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைந்தது..!
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படிசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 05 பேருக்கும், தனியார் வைத்தியசாலையில் 03 பேருக்கும்,யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேருக்கும்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் 05 பேருக்கும்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவருக்கும், மன்னார் கடற்படை முகாமில் 03 பேருக்கும்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.