யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும்! யாழ்.நகர்பகுதி மற்றும் திருநெல்வேலியில் அதிக மழைவீழ்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும்! யாழ்.நகர்பகுதி மற்றும் திருநெல்வேலியில் அதிக மழைவீழ்ச்சி..

யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணித்தியாலங்களில் யாழ்.மாநகரில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் கூறியுள்ளார். 

இதன்படி அச்சுவேலி 12.3 மில்லிமீற்றர், பருத்தித்துறை 5.4 மில்லிமீற்றர் , நயினாதீவு 4.1 மில்லிமீற்றர் , யாழ்ப்பாணம் 62.3 மில்லிமீற்றர் , யாழ்ப்பாண நகர் பகுதி 79.0 மில்லிமீற்றர் , நெடுந்தீவு 2.2 மில்லிமீற்றர் , சாவகச்சேரி 10.8 மில்லிமீற்றர், 

தெல்லிப்பளை 15.5 மில்லிமீற்றர் , அம்பன் 15.5 மில்லிமீற்றர், திருநெல்வேலியில் 41.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மேலும் தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு