யாழ்.நாவற்குழியில் தாய், மகனை கட்டிவைத்து சித்திரவதை செய்து கொள்ளை! இருவர் சிக்கினர், தெல்லிப்பழை கொள்ளையிலும் தொடர்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் தாய், மகனை கட்டிவைத்து சித்திரவதை செய்து கொள்ளை! இருவர் சிக்கினர், தெல்லிப்பழை கொள்ளையிலும் தொடர்பாம்..

யாழ்.நாவற்குழியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாய் மற்றும் மகனை கட்டிவைத்து சித்திரவதை செய்ததுடன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த வருடம் தெல்லிப்பழையில் வீடொன்றுக்குள் நுழைந்த 32 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு நாவற்குழி கொள்ளை சம்பவத்துடனும் தொடர்புடைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை நாவற்குழியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து சித்திரவதை செய்ததுடன் வீட்டிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 80 ஆயிரம் பெறுமதியான தொலைபேசி 

ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்ற நிலையில் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நாவற்குழி பகுதியில் குறித்த இருவரையும் சுற்றிவளைத்த பொலிஸார் 23, 26 வயதான இருவரையும் கைது செய்து சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த வருடம் தெல்லிப்பழையில் வீடொன்றுக்குள் நுழைந்து 32 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இவர்களே என்பது தொியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு