யாழ்.இராசாவின் தோட்டம் வீதி நவம்பர் 15ம் திகதிவரை முடக்கப்பட்டது! யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.இராசாவின் தோட்டம் வீதி நவம்பர் 15ம் திகதிவரை முடக்கப்பட்டது! யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு..

யாழ்.இராசாவின் தோட்டம் வீதி நவம்பர் மாதம் 15ம் திகதிவரை முடக்கப்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக 

வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் தடைப்பட்டு இருக்கும்.

அதனால் மாற்று வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறும் , அதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு