யாழ்.குருநகர் மீனவர்களின் படகை இடித்து சேதப்படுத்திவிட்டு படகிலிருந்தவர்களை துாக்கி கடலில் வீச முயற்சித்த இந்திய மீனவர்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகர் மீனவர்களின் படகை இடித்து சேதப்படுத்திவிட்டு படகிலிருந்தவர்களை துாக்கி கடலில் வீச முயற்சித்த இந்திய மீனவர்கள்!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் யாழ்.குருநகர் மீனவர்களின் படகை மோதி தள்ளியதுடன் மீனவர்களை கடலில் துாக்கி வீசுவதற்கு முயற்சித்துள்ளனர். 

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் 

இலங்கை கக்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் 

இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியதோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப்போட முயற்சித்துள்ளனர். 

இந்நிலையில் படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளார்கள்.

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை, குறிப்பாக அத்துமீறிய இந்திய மீனவர்கள் எமது படகினை சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது 

படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தபோதிலும் இலங்கை மீனவர்கள் 

தெய்வாதீனமாக உயிர் தப்பி கரைசேர்ந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு