யாழ்.ஊரெழு பொக்கணை துப்பாக்கி சூடு விவகாரம்..! கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோப்பாய் பொலிஸர் பொறுப்பேற்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பொக்கணை துப்பாக்கி சூடு விவகாரம்..! கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோப்பாய் பொலிஸர் பொறுப்பேற்பு..

யாழ்.ஊரெழு பொக்கணை பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் உருவான தர்க்கத்தின் பின்னணியில் இன்று அதிகாலை பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

 நேற்றய தினம் இரவு ஊரெழு பொக்கணை முருகன்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாகியிருந்தது. இதன் பின்னணியின் இன்று அதிகாலை பிரதேசசபை உறுப்பினர் ஒட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு

ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கும், மற்றய இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் சம்பவம் இடம்பெற்ற பகுதி கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். 

இந்நிலையில் தமது பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவம் என கோப்பாய் பொலிஸாரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுகள் நடந்த சம்பவம் என உறவினர்களும் சுட்டிக்காட்டிய நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு