அடாத்தாக வீட்டுக்குள் நுழைந்து 65 வயதான முதியவர் அடித்துக் கொலை! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
அடாத்தாக வீட்டுக்குள் நுழைந்து 65 வயதான முதியவர் அடித்துக் கொலை! 3 பேர் கைது..

வீடொன்றுக்குள் அடாத்தாக நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த முதிவரை அடித்து கொலை செய்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் பதுளை - லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு