யாழ்.வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினால் வீடு முற்றுகை! 3 வாள்கள் மீட்பு, ஒருவர் கைது..
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்கள் இருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில்
குறித்த வீட்டை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தியிருந்தனர். இதன்போது மூன்று வாள்கள் மீட்கப்பட்டன.
இதனை அடுத்து மூன்று வாள்களையும் கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூளாய் தெற்கு சுழிபுரத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரை
விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதோடு வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.