பிறந்து 3 நாட்களான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி பிறந்து 24 நாட்களேயான குழந்தை உட்பட உயிரிழந்த 3 பேர், அடங்கலாக யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 பேருக்கும்,
சாவகச்சோி வைத்தியசாலையில் 4 பேருக்கும், புங்குடுதீவு வைத்தியசாலையில் 2 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 3 நாட்களான குழந்தை உட்பட 2 பேருக்கும்,
தனியார் வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.