பிறந்து 24 நாட்களேயான குழந்தை உட்பட 3 பேர் கொரோனா தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலையில்..
யாழ்.மாவட்டத்தில் பிறந்து 24 நாட்களான குழந்தை உட்பட 3 பேருக்கு இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.
பிறந்து 24 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் குறித்த குழந்தைக்கும் 63 வயதான பெண் மற்றும் 42 வயதான ஆண் ஆகிய மூவருக்கே இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.