யாழ்.பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு! தாய்க்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு! தாய்க்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 1 மாதமான குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் குழந்தையின் இறப்பு தொடர்பில் இன்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

மேற்படி குழந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் குழந்தையின் தாய்க்கு கடந்த 22ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 

இதனையடுத்து நேற்றய தினம் குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குழந்தையின் மரணம் தொடர்பாக 

திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் சட்டவைத்திய அதிகாரி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு