யாழ்.நாவற்குழியில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல்! தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல்! தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.நாவற்குழியில் வீடு புகுந்து ரவுடிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. நாவற்குழி ஜே/294 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றய தினம் இரவு நுழைந்த ரவுடிகள்

வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளதுடன், வீட்டிருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் தலை மற்றும் கையில் காயமடைந்த நிலையில் தந்தையும், மகன்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு