யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட 3 பேர் சிக்கினர்! 6 கிலோ கஞ்சா மீட்பு, ஒருவர் கொடிகாமத்தை சேர்ந்தவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட 3 பேர் சிக்கினர்! 6 கிலோ கஞ்சா மீட்பு, ஒருவர் கொடிகாமத்தை சேர்ந்தவராம்..

யாழ்ப்பாணத்திலிருந்து காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட 3 பேர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

A-9 வீதியில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மாங்குளம் பொலிஸார் கார் ஒன்றை வழிமறித்து சோதனையிட்டபோது, 

6 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனை அடுத்து காரில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தளத்தினை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும்  

மற்றும் நெச்சிகாம பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு