யாழ்.குருநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றிவளைப்பு! கடலில் குதித்து தப்பித்த படகோட்டிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றிவளைப்பு! கடலில் குதித்து தப்பித்த படகோட்டிகள்..

யாழ்.குருநகர் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 350 கிலோ மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.குருநகர் - ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் 

அதனை பின்தொடர்ந்தபோது படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கடற்படையினர் படகினை சோதனையிட்டபோது 

அதில் மஞ்சள் இருப்பது அவதானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு