யாழ்.மீசாலை - புத்துார் சந்தியில் உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை - புத்துார் சந்தியில் உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..

யாழ்.மீசாலை - புத்துார் சந்தியில் நேற்று மாலை உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சந்திப்பகுதியில் உழவு இயந்திரம் வீதியை கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளிலுடன் மோதி 

விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு