யாழ்.சுழிபுரத்தில் விடு புகுந்து கொள்ளையிட முயற்சித்தவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரத்தில் விடு புகுந்து கொள்ளையிட முயற்சித்தவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில்  திருடன் ஒருவன் நேற்றைய தினம் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொல்புரம் மேற்கு சுழிபுரம் பத்தானை கேணி ஞான வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் 

வீட்டிலுள்ளவர்கள் வேலைக்கு சென்ற சமயம் பார்த்து வீட்டின் கதவை உடைக்க முற்பட்டுள்ளான். கதவு உடைக்கப்படும் சத்தத்தை அறிந்த அயல் வீட்டார் 

உடனடியாக குறித்த வீட்டிற்கு சென்ற நிலையில் திருடன் ஓட ஆரம்பித்தான். அயலவர்களின் உதவியுடன் திருடனை பிடித்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பொலிஸார் திருடனின் வீட்டை சோதனை செய்தபோது ஒரு தொகை நகை அடைவு சிட்டைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு