யாழ்.இணுவில் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் வீதியில் நின்றவர்கள் மீது வாள்வெட்டு! இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் வீதியில் நின்றவர்கள் மீது வாள்வெட்டு! இருவர் காயம்..

யாழ்.இணுவில் - காரைக்கால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

காரைக்கால் சிவன் கோவிலடியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இருவர் கதைத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் வாகனத்தில் வந்த 5 மேற்பட்ட நபர்கள் 

வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு