யாழ்.வட்டுக்கோட்டையில் குழு மோதலில் ஒருவர் படுகாயம்! இருவர் கைது, பொலிஸார் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் குழு மோதலில் ஒருவர் படுகாயம்! இருவர் கைது, பொலிஸார் நடவடிக்கை..

யாழ்.வட்டுக்கோட்டை - முதலியார் கோவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு காயமடைந்துள்ள குடும்பஸ்த்தரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் குறித்த நபர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு

தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு