யாழ்.அரியாலை - பூம்புகாரில் மனைவியால் அடித்துக் கொல்லப்பட்ட கணவன்! நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - பூம்புகாரில் மனைவியால் அடித்துக் கொல்லப்பட்ட கணவன்! நடந்தது என்ன?

குடும்ப தகராறு காரணமாக கணவனை திருகுவலை கட்டையால் அடித்து மனைவி கொன்ற சம்பவம் யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த சம்பவத்தில் துரைராஜா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இவர், 

ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகின்றனர். மேசன் தொழிலில் ஈடுபடும் உயிரிழந்த நபருக்கும்,

அவருடைய மனைவிக்குமிடையில் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்.பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

உடனடியாக குடும்பப் பெண் கைது செய்யப்பட்டார். திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் 5இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் 

பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு