யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு..

யாழ்.நீரிவேலியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த டிலக்சன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் 

நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம்

வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு